08 November 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றை யெழிலாரப்
போந்தமென்சொ லின்பம்பயந்த மைந்தரவர் போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே.

                   -திருஞானசம்பந்தர்  (1-73-2)


பொருள்: பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு, பாம்பு, கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர், காந்தள் செடிகள் பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர்  ஆவார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...