27 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வானிறைந்த புனல்மழைபோய்
மலர்மழையாய் இடமருங்கு
தேனிறைந்த மலரிதழித்
திருமுடியார் பொருவிடையின்
மேனிறைந்த துணைவியொடும்
வெளிநின்றார் மெய்த்தொண்டர்
தானிறைந்த அன்புருகக்
கைதொழுது தனிநின்றார்.


              -திருக்குறிப்புத்தொண்ட நாயனார்  (126)


பொருள்: வானில் நிறைந்த நீராய மழை போய், மலராய மழை பொழிந்திடத், திருக்குறிப்புத் தொண்டரின் அருகில், தேன் நிறைந்த மலர்க் கொன்றையை அணிந்த திருமுடியையுடைய பெரு மான், ஆனேற்றின்மீது அருள் நிறைந்த உமையம்மையாருடன் வெளிப்பட்டு முன் நின்றார். மெய்ம்மை தவறாத திருக்குறிப்புத் தொண்டர், தாமும் கண்ணால் கண்டு, உள்ளம் நிறைந்த அன்பு உருக்கிட அம்மையப்பரைக் கைதொழுது கொண்டு தனியே நின்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...