22 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


என்னறி வால்வந்த தன்றிது
முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே.

                  -மாணிக்கவாசகர் - திருக்கோவையார்  (8,3-1)


பொருள்: இது முன்னும் என்னறிவால் வந்தது அன்று இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு கூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வந்தர வந்தது முயன்றால் மன் நெறி தந்தது தெய்வம் இன்னும் இருந்தன்று; இன்னுஞ் சிறிது முயன்றான் மன்னிய நெறியாகிய இவ்வொழுக்கத்தைத் தந்ததாகிய தெய்வம் இன்னும் இருந்தது; அது முடிக்கும், அதனான்; நெஞ்சே நெஞ்சமே; வருந்தல் வருந்தாதொழி; மின் எறி செஞ்சடைக் கூத்தப் பிரான் வியன் தில்லை முந்நீர் மின்னை வெல்கின்ற சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடற்றிரை; பொன் எறி வார் துறைவாய் மின்தோய் பொழிலிடத்துச் சென்றும் பொன்னைக் கொணர்ந்து எறிகின்ற நெடிய துறையிடத்து மின்னையுடைய முகிலைத்தோயும் பொழிற்கட் செல்லுதும்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...