28 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உரவன்புலியி னுரிதோலாடை யுடைமேற் படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்த னுகிர்தன்னாற்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம் பதியாக
இரவும்பகலு மிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

                     -திருஞானசம்பந்தர் (1-74-2)


பொருள்: மிக வலிமையுடையவனும், புலியிலினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர்செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...