07 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எய்துமவர் குறிப்பறிந்தே
இன்மொழிகள் பலமொழிந்து
செய்தவத்தீர் திருமேனி
இளைத்திருந்த தென்னென்று
கைதொழுது கந்தையினைத்
தந்தருளும் கழுவஎன
மைதிகழ்கண் டங்கரந்த
மாதவத்தோர் அருள்செய்வார்.


                 -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (118)


பொருள்: தம் முன்பு வந்தருளும் அவ்வடியாரின் குறிப் பினைத் திருக்குறிப்புத்தொண்டர் அறிந்து, அவரை நோக்கி, இனியன வாகப் பலமுகமன் மொழிந்து, செப்பமுடன் நற்றவத்தினைப் புரிந் தருளும் தவச்சீலரே! உம் திருமேனி வாட்ட முற்றிருப்பதேனோ? என்று கூறிக் கைதொழுது, `உமது கந்தையாய ஆடையைத் தந்தரு ளுக! நான் அதைத் தோய்த்து அழுக்கு நீக்கித் தருவேன்` என்று கேட் டருளலும், அது பொழுது கருமை திகழும் கழுத்தை மறைத்து வந்த அத்தவமுனிவரும், திருக்குறிப்புத்தொண்டரை நோக்கி, இவ்வாறு அருள் செய்வாராய்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...