29 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்
செறிவுடை யங்க மாலை சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

                            -திருநாவுக்கரசர்  (4-72-3)


பொருள்: ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் மாதொரு பாகராய் , தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும் தோற்றத்தை நீக்கி , அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய் , செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய் , அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...