14 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காம்பிணை யாற்களி மாமயி
லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றுமென் சிந்தனைக்கே.

                       -மாணிக்கவாசகர்  (8-2,20) 


பொருள்:காம்பு இணையால் வேயிணையானும்; களிமா மயிலால் களிப்பையுடைய கரிய மயிலானும் கதிர் மா மணி யால் ஒளியையுடைய பெரிய நீலமணியானும்; வாம் பிணையால் வாவும் பிணையானும்; வல்லி ஒல்குதலால் வல்லி நுடங்குதலானும்; கயிலைப் பயில் புனமும் என் சிந்தனைக்குத் தேம்பிணை வார் குழலாள் எனத் தோன்றும் கயிலைக்கணுண்டாகிய அவள் பயிலும் புனமும் இன்புறுத்துதலால் என்மனத்திற்குத் தேம்பிணையை யுடைய நெடிய குழலையுடையாளென்றே தோன்றா நின்றது

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...