17 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர் மேயானைப்
பழுதின்ஞான சம்பந்தன்சொற் பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின்
றழுதுநக்கு மன்புசெய்வார் அல்ல லறுப்பாரே.

                  -திருஞானசம்பந்தர்  (1-73-11)


பொருள்: பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர்மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...