16 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குறித்தபொழு தேயொலித்துக்
கொடுப்பதற்குக் கொடுபோந்து
வெறித்தடநீர்த் துறையின்கண்
மாசெறிந்து மிகப்புழுக்கிப்
பிறித்தொலிக்கப் புகுமளவில்
பெரும்பகல்போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திருவருளால்
மழையெழுந்து பொழிந்திடுமால்.


                      -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (121) 


பொருள்: அடியவருக்குத் தாம் கூறியவாறு குறித்த அக் காலத்தில் கொடுப்பதற்காக, நறுமணமுடய மலர்கள் நிறைந்த குளத்தின் கண்ணுள்ள நீர்த்துறைக்குச் சென்று, அக்கந்தையைத் தோய்த்து அழுக்கினை நீக்குதற்காகப் பின்னர் உவர்மண் சேர்த்து மிகவும் புழுங்கும்படி வெள்ளாவியில் வைத்து வேறாக எடுத்து அதனைத் தோய்த்திடத் தொடங்கிய அளவில், நண்பகல் கழிந்து, பிற்பகலாய மாலைவேளை அணுகும் காலமுமாயிட, அக்காலத்தே மான் ஏந்திய கையையுடைய இறைவனின் திருவருளால் மழை பொழிந்திடலாயிற்று.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...