06 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அப்பொற் பதிவாழ் வணிகர்குலத்
தான்ற தொன்மைச்
செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம்
செய்ய வந்தார்
எப்பற் றினையும்அறுத் தேறுகைத்
தேறு வார்தாள்
மெய்ப்பற் றெனப்பற்றி விடாத
விருப்பின் மிக்கார்.

                       -மூர்த்தி நாயனார்  (8)


பொருள்: அத்தகைய நகரத்தில் வாழும் வணிகர்களது குலத்தில், மிகவும் சிறந்ததென நெடுங்காலமாகச் செப்பத் தகுந்த சீருடைய குடியிலுள்ளோர், செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவர் ஒருவர். அவர் உலகியல் இன்பமாய எவ்விதப் பற்றி னையும் முற்றும் அறுத்து, ஆனேற்றின்மீது எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானின் திருவடிகளையே உண்மையான பற்று எனப் பற்றிக் கொண்டு அதனை விடாத விருப்பில் மிகுந்தவர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...