27 January 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற்
போது போக்கும்
வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட
வாய்மை வேத
நன்மைத் திருநீற் றுயர்நன்னெறி
தாங்கு மேன்மைத்
தன்மைப் புவிமன் னரைச்சார்வதென்
றென்று சார்வார்.

                      - மூர்த்தி  நாயனார்  (18)


பொருள்: கீழான செயல் செய்வதில் வல்லமையுடைய சமணருடன் கூடித், தனது பொழுதினைப் போக்குகின்ற வன்மையான கொடும் பாதகன் மாய்ந்திட, மெய்யான நான்மறைகளில் கூறப்பட்ட நன்மையுடைய திருநீற்றின் நன்னெறியைத் தாங்கும் மேன்மையாய தன்மையுடைய ஆளும் அரசரை இப்பாண்டி நாடு என்று பெறவுள் ளதோ? என்ற எண்ணமுடையராய்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...