03 January 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


காணும தொழிந்தேன் நின்திருப் பாதங்
கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. 

                    -மாணிக்கவாசகர்  (8-44-5)


பொருள்: உன் திருவடியைப் பிரிந்திருத்தலால் காண்பதை ஒழிந்தேன். கண்கள் களிப்பு மிகும்படி பார்த்துப் போற்றுவது ஒழிந்தேன். வாயால் துதிப்பதையும் விட்டேன். உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பும் என்னுடைய அற்பத் தன்மையால் தோன்றுதல் இல்லேனாயினேன். இவற்றால் பிறகு கெட்டேன். அதனால் நீ இனிமேல் என் முன் வந்தாலும் பார்ப்பதற்கும் நாணுவேன் 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...