10 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார் நடுவுடை யார்க ணிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார் திரிபுர மெரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும் ஆவடு துறைய னாரே.

                          -திருநாவுக்கரசர்  (4-56-8)


பொருள்: மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடுதுறைப் பெருமான் , முற்பட்டுத்தேவர்கள் வந்து முறைப்படி வணங்கித் துதிக்க , சிவபாதங்களைத் தம் நெஞ்சில் நடுதலாகிய செம்மையுள்ள நந்தி மாகாளர் என்பவர்களைத் தவிரத் தம்மை வழிபடாது வீணானவரான அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவராவர்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...