12 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பூவார் சென்னி மன்னனெம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.

                    -மாணிக்கவாசகர்  (8-45-1)


பொருள்: மலர் நிறைந்த முடியையுடைய அரசனாகிய பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியவர்களாகிய நம்மை, இடை யறாமல் உள்ளத்தில் கலந்து உணர்வுருவாய் உருக்குகின்ற பெருகிய கருணையினால், ஐயோ என்று இரங்கியருளப்பட்டு அன்பு உருவாய் ஆட்பட்டவர், நிலையில்லாத வாழ்க்கையை விட்டு நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடையக் காலம் வந்துவிட்டது. போவோம். வந்து முற்படுங்கள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...