18 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வந்துற்ற பெரும்படை மண்புதை
யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை
மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்னாணை
செலுத்து மாற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி
காவல் கொண்டான்.

               -மூர்த்தி நாயனார்  (12)


பொருள்: இவ்வாறு வந்துற்ற பெரும்படையை நிலம் தெரியாதவாறு நெருங்க அணியாகப் பரப்பி, சந்தனச் சோலைகள் நிரம்பிய பொதிய மலையையுடைய தமிழ்நாட்டினை ஆண்டுவந்த பாண்டிய அரசனின் வீரம் சிந்திடுமாறு, போரில் அவனை வென்று, பின்னர்ப் பாண்டிய நாட்டில் தனது ஆணையைச் செலுத்தும் வகையில் மணம் நிறைந்த சோலை சூழும் மதுரை மாநகரைத் தான் ஆட்சி கொண்டான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...