23 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே.

                                -சுந்தரர்  (7-43-1)


பொருள்: நெஞ்சுருகி வணங்குகின்ற  அடியவர், நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்; நாளை வாய்க்கும் என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்துவிட்டால், அதன்பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்து விடுமோ? புகழையுடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே விரைந்து அருள்புரியீர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...