11 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்
உழுவார்க்கரி யவ்விடை யேறிஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்
முழவாரொலி பாடலொ டாடலறா
முதுகாடரங் காநட மாடவல்லாய்
விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

                        -சுந்தரர்  (7-42-6)


பொருள்: தொழுகிறவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே , அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய் , நின்றவனே , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே , உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே , பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே ,  மத்தளஒலியும் , பாட்டும் , குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே , விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்ச மாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...