17 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.

                           -திருமூலர்  (10-2-3,1) 


பொருள்: உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது, சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன் என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். யாவரும்  அறியும்படி இந்நிலவுலகில் அன்புடன் வழிபாடு  செய்தாள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...