02 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

                          -சுந்தரர்  (7-42-4)


பொருள்: பண்போலும் மொழியினையுடைய உமையை ஒருபாகத்தில் உடையவனே , யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே , இன்பத்தைத் தரும் அரிய அகிலையும் , நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , மண்பொருந்திய மத்தளமும் , குழலும் ஒலிக்க , மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல் , வானத்தில் பொருந்திய சந்திரன் தவழ்கின்ற திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வை.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...