28 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

               -சுந்தரர்  (7-65-5)


பொருள்:  தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும் , செல்வத்தை யுடைய , அழகிய திருநின்றி யூரில் உள்ள இறைவனே , இந்திரன் ஒருவன் , உன்னிடத்து வந்து உன்னை வழிபட , அதற்கு மகிழ்ந்து , அவனுக்கு , ` நீ , விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய தலைமையையும் , ` காலை , நண் பகல் , மாலை ` என்னும் மூன்று சந்திகளிலும் , இலிங்க உருவத்தை நிறுவி , கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு , அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற , அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து , அடியேன் , உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...