01 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மின்னே ரனைய பூங்கழல்க
ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே. 

                  -மாணிக்கவாசகர்  (8-50-1) 


பொருள்: நினது  திருவடியை அடைந்த அன்பர்கள் இவ்வுலக மாயையைக் கடந்து தேவர்கள் எல்லாம் மலர்களால் அருச்சிக்குமாறு  வணங்க  நின்றார்கள். அப்படி இருக்கும் போது, கல்லை நிகர்த்த மனத்தை உடையவனாய்க் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை அடையும் வகையைச் சொல்வாயாக.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...