10 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வடங்கெழு மலைமத் தாக வானவ ரசுர ரோடு
கடைந்திட வெழுந்த நஞ்சங் கண்டு பஃறேவ ரஞ்சி
அடைந்துநுஞ் சரண மென்ன வருள்பெரி துடைய ராகித்
தடங்கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவி னாரே.

                      -திருநாவுக்கரசர்  (4-65-2)


பொருள்: வாசுகியை கயிறாகக்கொண்டு   மந்தர மலையை மத்தாகக்கொண்டு தேவர்கள் அசுரரோடு பாற்கடலைக் கடைய , எழுந்த விடத்தைக் கண்டு பல தேவர்களும் அஞ்சிச் சிவ பெருமானை அடைந்து  அடைக்கலம் என்று வேண்டப் பேரருள் உடையவராய் கடல் நஞ்சினை உண்ட பிரான் திருச்சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளார் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...