19 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திருவும் வண்மையுந் திண்டிற லரசுஞ்
சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி யடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே

                 -சுந்தரர் (7-65-1)


பொருள்: பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர் கொண்டுவந்த மணிகளை , சிறுமகாரது பல குழுக்கள் , விளையாட்டிற் சென்று எடுத்து , தெருக்களிலும் , திண்ணைகளிலும் , முற்றங்களிலும் குவிக்கின்ற , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , நீ , சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு , அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு , செல்வத்தையும் , கொடைத் தன்மையையும் , திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு , அடியேன் உனது மலர் போலும் திரு வடியைப் புகலிடமாக அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...