21 July 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. 

                    -திருமூலர்  (10-2-13,1)


பொருள்: காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் என்னும் ஐம்பெரும் பூதங்களும் இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு அவிழ்த்து வெளிவிடுகின் றான் சிவபெருமான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...