17 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வீளைக்குரலும் விளிச்சங்கொலியும் விழவின் னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார்
ஈளைப்படுகி லிலையார்தெங்கிற் குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே.

                        -திருஞானசம்பந்தர்  (1-67-6)


பொருள்:  ஆற்றுக்கரையில்  வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும், வாழை மரத்தில் பழுத்த வாழைப்பழங்களும், பாளைகளையுடைய கமுகமரங்களில் பழுத்தபாக்குப் பழங்களும் விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும் சங்கொலியும், விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர். அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...