05 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சுற்று மூர்சுழி யல்திருச் சோபுரந் தொண்டர்
ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப்
பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே.
 
               -சுந்தரர்  (7-31-2)

 

பொருள்: அடி யார்கள் சூழும் ஊராகிய சுழியல், சோபுரம், ஒற்றியூர் , ஊறல்     ,  பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு , இடைமருது என்னும் இவ்வூர்களை இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும் பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது இடமாகும். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...