29 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

ஊனமுது கல்லையுடன்
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள்
மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு
தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது
தித்திக்கும் எனமொழிந்தார்.
 
                   -கண்ணப்ப நாயனார் புராணம்  (150)

 

பொருள்:  மாமிச அமுதை இறைவனின் திருமுன்னிலையில் வைத்து, எம் ஐயனே! இது முன்னை நாளில் எடுத்து வந்ததினும் நன்றாகும், பன்றியுடன் மான் கலைகள், காட்டுப்பசு ஆகிய இவை களின் நல்லுறுப்புகளின் இறைச்சியும் உள்ளது, அடியேனும் சுவை பார்த்தேன், அத்துடன் தேனும் இவற்றுடன் கலந்துள்ளது, தித்திக்கும், என மொழிந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...