17 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கரியவனான்முகன் கைதொழுதேத்தக் காணலுஞ்சாரலு மாகா
எரியுருவாகியூ ரைய மிடுபலியுண்ணியென் றேத்தி
வரியரவல்குன் மடந்தையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயினதூவி விகிர்தனசேவடி சேர்வோம்.
 
                     -திருஞானசம்பந்தர்  (1-40-9)

 

பொருள்: மாலவனும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...