15 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மேவநேர் வரஅஞ்சா
வேடுவரே இதுசெய்தார்
தேவதே வேசனே
திருமுன்பே இதுசெய்து
போவதே இவ்வண்ணம்
புகுதநீர் திருவுள்ளம்
ஆவதே எனப்பதறி
அழுதுவிழுந் தலமந்தார்.
 
                  -கண்ணப்பநாயனார்  (137)

 

பொருள்: நேர் வருவதற்கு அஞ்சாத வேடுவரே இதனைச் செய்தாராதல் வேண்டும். தேவாதி தேவனே! ஈசனே! உம் திருமுன்பிலும் வேடுவர் இவ்வருவருப்பைச் செய்து போவதோ? இக்கொடுமை நிகழ்வதும் பெருமானின் திருவுள்ளம் ஆவதோ? என்று பதறி அழுது விழுந்து துன்புற்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...