19 June 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

அறிவிலா வரக்க னோடி யருவரை யெடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு மூதறி வாள னோக்கி
நிறுவினான் சிறு விரலா னெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினா லருள்கள் செய்தான் றிருவையா றமர்ந்த தேனே.
 
                                  -திருநாவுக்கரசர்  (4-39-10)

 

பொருள்: இறைவனுடைய ஆற்றலைப் பற்றிய அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்ப்பதற்கு முழுமையாக முயன்ற செயலைக்கண்டு , உண்மையான ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன்போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன் கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன் இறைவனைப் பற்றிய அறிவோடு  பாட , அவனுக்கு அப்பெருமான் அருளைச் செய்தான் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...