01 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இளைத்தனர் நாய னார்என்
றீண்டச்சென் றெய்தி வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு
முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி
வாயில்மஞ் சனநீர் தன்னை
விளைத்தஅன் புமிழ்வார் போல
விமலனார் முடிமேல் விட்டார்.
 
              -கண்ணப்பநாயனார்  (123)
பொருள்: நாயனார் பசியால் இளைத்துவிட்டார் என்று அவர் அருகே சென்று, மலையில் முளைத்து எழுந்த சுடர்க் கொழுந்தாய முதல்வரைக் கண்டு, அவர்தம் முடிமீதிருந்த பூக்களைக் காலில் அணிந்த அழகிய செருப்பால் அகற்றி, தம் வாயில் உள்ள நீரினைத் தம் அன்பினை உமிழ்வார்போல வினையின் நீங்கி விளங்கி நிற்கும். பெருமானின் திருமுடிமேல் உமிழ்ந்து விட்டார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...