23 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூத்தாரும் பொய்கைப்
புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம்.
 
                  -மாணிக்கவாசகர்  (8-15-1)

 

 பொருள்: மலர்கள் பூத்து இருக்கின்ற தடாகநீர் இதுதான் என்று எண்ணிக் கானலை முகக்கின்ற அறிவிலியினது குணம், எங்களுக்கு உண்டாகாமல் நீக்கினவனே! தில்லை அம்பலத்தில் நடனம் செய்கின்ற கூத்தனே! உனது செம்மையான திருவடியை அடையும்படிஎன்று பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...