11 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.
 
                     -திருமூலர்  (10-11-1)

 

பொருள்:  நல்ல  மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன்  இல்லத்துள் இருக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்றது ,  தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் தோட்டத்து  ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...