27 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டென்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக்
கென்னையாள் ஆண்ட நாயகனே
முக்கணா யகனே முழுதுல கிறைஞ்ச
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
பக்கலா னந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.
 
               - கருவூர்த்தேவர் (9-11-5)

 

பொருள்: விரைவில் மறையும் செல்வத்தைத் திரட்டுதலையே பலகாலும் நினைத்து ஐம்பொறிகளோடு சீவான் மாவாகிய அடியேனுக்கு ஏற்பட்ட இந்தப் பூசல்முழுதும் நீங்குமாறு வந்து என் உள்ளத்திலிருந்து என்னை ஆட்கொண்ட தலைவனே! மூன்று கண்களை உடைய மேம்பட்டவனே! உலகம் முழுதும் உன்னை வழிபடும்படி திருமுகத்தலை என்ற திருத்தலத்தில் உறைந்து அடியேன் உள்ளத்தும் உறைந்து, உன் பவளம்போன்ற வாயினால் மெய்ப் பொருளை உபதேசித்து அடியேனிடத்தும் ஆனந்தம் தொடர்ந்து நிகழு மாறு செய்தாய். இஃது ஒரு வியப்பே.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...