25 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உற்றார் சுற்றமெனும் மது
விட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இட
ரைத்து றந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந் திரு
மேற்ற ளிஉறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்
தேத்த மாட்டேனே.
 
              - சுந்தரர் (7-21-4)

 

பொருள்:  உறவினர்  மற்றும் சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து , அவர்கள் தொடர்பிலே பட்டு , உய்ந்து போகமாட்டாது நிற்கின்ற அந்நிலையைத் துறந்து , உன்னையே புகலிடமாக அடைந்தேன் . அதனால் , இப்பொழுது , எத்தன்மையதான பொருளால் , என்ன குறை அடியேனுக்கு இருக்கின்றது ? ஒன்றும் இல்லை .  மூன்று மதில்களையும் அழித்தவனே , கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே என் துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன் . ஆதலின் இனி , உன்னையன்றிப் பிறரைப் பணிந்து புகழ்தலைச் செய்யவே மாட்டேன் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...