12 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும்
இருவரு மெழுந்தும் வீழ்ந்து மிணையடி காண மாட்டா
ஒருவனே யெம்பி ரானே யுன்றிருப் பாதங் காண்பான்
அருவனே யருள வேண்டு மதிகைவீ ரட்ட னீரே.
 
                          - திருநாவுக்கரசர் (4-26-10)

 

பொருள்: அதிகை வீரட்டனே ! வடிவம் புலப்படாது இருப்பவனே ! திருமகள் கேள்வனாய திருமாலும் , நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் ஆகிய இருவரும் கீழ் நோக்கித் தோண்டியும் மேல்நோக்கிப் பறந்தும் , திருவடிகளையோ உன் உச்சியையோ காண இயலாத ஒப்பற்ற பெருமானாகிய உன் திருப்பாதங்களை அடியேன் காணுமாறு அருள் செய்யவேண்டும் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...