16 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மையமர் கண்டனை வான நாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
 
                 - மாணிக்கவாசகர்  (8-9-12)

 

பொருள்: தாமரை மலர் போன்ற செவ்வரிபடர்ந்த இரண்டு கண்களையும் பொன் வளையணிந்த தோள்களையும் பாம்பின் படம் போன்ற அல்குலையுமுடைய மடந்தைப் பருவத்தையுடைய பெண்களே! கருமையமைந்த கழுத்தினையுடையவனும் விண்ணுலகத் தாருக்கு அமுதமாயிருப்பவனும் செம்மை நிறமுடைய கூத்தனும், தேவனும், தேவர்க்குத் தலைவனும் நம்மைத் தன் வசப்படுத்தி அடிமை கொண்டு தனது அரிய தன்மையைப் புலப்படுத்தினவனும் பொய்ம்மை யாளருக்குப் பொய்ம்மையானவனும் மெய்ம்மையாளருக்கு மெய்ம் மையானவனுமாகிய இறைவனைப் பாடிப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...