26 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
            - மாணிக்கவாசகர்  (8-9-15)

 

பொருள்: கருங்குவளை மலர் போன்ற பெரிய கண்களையுடைய இளம் பெண்களே! ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தெளிவானவனும், அதன் பாகானவனும், தேடுவதற்கு அருமையான நன்மைப் பொருளானவனும், சுவை கெடாத தேனானவனும், முக்கனிகளின் சுவையானவனும், மனத்தில் புகுந்து இனிக்க வல்ல தலைவனும், பிறவித்தளையை அறுத்து ஆண்டுகொண்டருளின கூத்தப் பெருமானுமாகிய இறைவனை நாவில் வடுவுண்டாகும்படி, துதித்துப் பாடிப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...