24 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மடக்கினார் புலியின் றோலை மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி யதிகை வீரட்ட னாரே.
 
               - திருநாவுக்கரசர் (4-27-1)

 

பொருள்: புலியின்தோலை உடையாக சுற்றி இடையில் உடுத்துப்பாம்பினை அதன் மீது கச்சாக இறுக்கிக் கட்டிப் பிறையைச் செறிந்த சடைமீது செருகித் தொண்டைக்கனி போன்ற சிவந்த வாயையும் துடி போன்ற இடையையும் கடல் போன்ற அல்குலையும் உடைய பார்வதியைத் தம் உடம்பின் ஒருபாகமாக அடக்கியவர் கெடில நதியை ஒருபுறம் எல்லையாக உடைய அதிகை வீரட்டனார் ஆவர் .

 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...