13 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நொந்தா வொண்சுடரே நுனை
யேநி னைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
மனமேபு குந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திரு
மேற்ற ளிஉறையும்
எந்தாய் உன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.
 
               - சுந்தரர் (7-21-1)

 

 பொருள்:ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே , என் தந்தைக்கும் பெருமானே , கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே , என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய் ; ஆதலின் , இனி அடியேன் உன்னை யன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...