20 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோலப்பூங் கூடை தன்னை
நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு
மலர்க்கையில் தண்டுங் கொண்டங்
காலய மதனை நோக்கி
அங்கணர்க் கமைத்துச் சாத்தும்
காலைவந் துதவ வேண்டிக்
கடிதினில் வாரா நின்றார்.
 
               - எறிபத்த நாயனார் புராணம் (10)

 

பொருள்: பூங் கூடையில் அம் மலர்களை நிறைத்துக் கொண்டு, தம் உள்ளத்தில் தூய மெய்யன்பையுடைய வராய், மலர்போலும் திருக்கரத்தில், அம்மலர்க் கூடையைத் தொங்க விட்டிருக்கும் தண்டத்தையும் கொண்டு, அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குத் திருமாலை கட்டிச் சாத்தும் அமையத்து, அம்மலர்களைக் கொண்டு வந்து உரிய நேரத்தில் கொடுக்க விரும்பி விரைந்து வந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...