30 March 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


பாரூர்பல புடைசூழ்வள
வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை
பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள்
பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர்
புகழாகுவர் தாமே

              - சுந்தரர் (7-71-10)

 

பொருள்: கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திரு மறைக்காட்டை , நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும் , வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூ ரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடு கின்ற , அப்பெருமானது திருவடித் தொண்டர்கள் , நீர் சூழ்ந்த நிலத் தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...