02 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சிந்தும் பொழுதில் அதுநோக்கும்
சிறுவர் இறையில் தீயோனைத்
தந்தை யெனவே அறிந்தவன்தன்
தாள்கள் சிந்துந் தகுதியின ல்
முந்தை மருங்கு கிடந்தகோல்
எடுத்தார்க் கதுவே முறைமையினால்
வந்து மழுவா யிடஎறிந்தார்
மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்.

                       - சண்டேசுவரநாயனார் புராணம் (51)


பொருள்: பாற்குடங்களைக் காலால் இடற அவற்றினின்றும் பால் சிந்தும் பொழுதில், அதனை நோக்கிய சிறுவராய விசாரசரும னார், ஓர் இறைப்பொழுதில் அத்தீயவன் தம் தந்தை என உணர்ந்ததும், அப்பெரும்பிழை செய்தானின் கால்களைத் தடிய, முன்னாகக் கிடந்ததொரு தண்டினை எடுத்த போது, அதுவே ஒரு மழுவாக, தந்தையின் கால்களை வெட்டினார். அவ்வந்தணனும் மண் மேல் வீழ்ந்தான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...