08 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அங்கங்களும் மறைநான்குடன்
விரித்தான்இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும்
வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு
வணங்கும்மறைக் காடே

              - சுந்தரர் (7-71-3)


பொருள்: மறைகள்  நான்கினோடு , அவற்றின் அங்கங்களை யும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம் ; அஃது யாதெனின்  , தென்னை மரங்களும் ,  பனை மரங்களும் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில் , சங்குகளும் , விளங்குகின்ற இப்பிகளும் , வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப் பட , மரக்கலங்களும்  கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...