02 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தேமென் கிளவிதன் பங்கத்
திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.

             -திருக்கோவையார்  (8-12,1) 


பொருள்: தேன்போலும் மெல்லிய மொழியையுடை யாடனது கூற்றையுடைய இறைவனுறையுந் தில்லையை யொப்பீர்; யான் கொணர்ந்த பூவையுடைய மெல்லிய தழையையும் அழகிய பூக்களையுங் கொள்கின்றிலீர்; உணர்விழந்த யான் றனிமைப்படச் செய்யத்தகாத பொறுத்தற்கரிய கொடுமைகளைச் செய்யத்தகு மென்று துணிந்து செய்து; நுங் கண்மலராகின்ற காமன் கணை கொண்டு அருளத்தக்காரை அலைத்தலையோ முடியக் கற்கப்பட்டது, நும்மால் அருளுமாறு கற்கப்பட்ட தில்லையோ!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...