29 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே யுணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கட் பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளே னிறைவ னேநா னென்செய்வான் றோன்றி னேனே.

                  - திருநாவுக்கரசர் (4-78-2)


பொருள்: ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்ற ஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன் . பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன் . இறைவனே ! நான் எதற்காக இருக்கிறேன் ? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...