22 March 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


பொன்னார் சடையோன் புலியூர்
புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே.

            -திருக்கோவையார்  (8-11,8)


பொருள்: பொன்போலும் நிறைந்த சடையையுடையவனது புலியூரைப் புகழாதாரைப்போல வருந்த; எனக்குப் புரிந்த நோய் என்னாலறியப்படுவதில்லை; ஆயினும் இதன்றிறத்து யானொன்றுரைக்க மாட்டேன்; எனக்குத் துணையாகிய மனனே; அயலார் சொன்னாரென்று இவள் வந்து சொல்லுகின்ற இக்குற்றம் என்கண் வாராமல்; அவராற்றாமை கூறக் கேட்டலானுண்டாகிய என தாழ்துயரை உள்ளவாறு சொல்ல வல்லையாயின்; நீர்மையையுடைய இனியவர்க்கு நீ சொல்லு வாயாக

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...