13 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொடுத்த இதழி சூழ்சடையார்
துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம்பொருட்டால்
ஈன்ற தாதை விழவெறிந்தாய்
அடுத்த தாதை இனியுனக்கு
நாம்என் றருள்செய் தணைத்தருளி
மடுத்த கருணை யால்தடவி
உச்சி மோந்து மகிழ்ந்தருள.

                   - சண்டேசுவரநாயனார் (54) 


பொருள்: கொன்றைப்பூவைச் சூடிய சடையையுடைய பெருமான், தம் திருவடிகளில் வீழ்ந்த விசாரசருமரைத் திருக்கரத்தால் எடுத்து நோக்கி, `எம்பொருட்டால் உன்னைப் பெற்ற தந்தை வீழ வெட்டினாய். அடுத்த தந்தை இனி உனக்கு நாம்` என்று கூறி, அருள் செய்து, மகனாரை அணைத்தருளி, பெருகும் கருணையால் அவர் திருமுதுகைத் தடவி, உச்சியில் முத்த மிட்டு மகிழ்ந்தருளலும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...