20 March 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை யாளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

              - சுந்தரர் (7-71,7)


பொருள்:  வளர்தற்குரிய   இளமை யான பிறையை உடையவனும் , யான் முன்னே செய்த வலிய வினை களை , களைகளைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது , செந்நெற் கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற , மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும் , ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல் , வளைந்த சங்குகளோடு , சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...