07 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேழத் தரசங்கண் விரைந்து
நடந்து சென்று
வாழ்வுற் றுலகஞ்செய் தவத்தினின்
வள்ள லாரைச்
சூழ்பொற் சுடர்மாமணி மாநிலந்
தோய முன்பு
தாழ்வுற் றெடுத்துப் பிடர்மீது
தரித்த தன்றே.

              - மூர்த்திய நாயனார் (34) 


பொருள்: பட்டத்து யானை, அவ் விடத்திற்கு விரைந்து சென்று, வாழ்வு கொண்ட இவ்வுலகம் செய் திட்ட தவத்தின் பெரும் பேறாகவுள்ள அம்மூர்த்தியாரைத், தனது முகத்தில் சூழ இடப்பெற்ற மணிகள் பதித்த நெற்றிப்பட்டம், இப்பெரு நிலத்தில் தோயுமாறு வணங்கி, தனது துதிக்கையால், அவரை எடுத்துத் தனது பிடரி மீது வைத்துக் கொண்டது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...